ADDED : ஏப் 18, 2026 05:56 AM

- நமது நிருபர் -: தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மோர் களியும் ஒன்று. மோர் மிளகாய், தயிர், அரிசி மாவு கொண்டு செய்யக்கூடியது. ஏறக்குறைய உப்புமா செய்வது போன்று இருக்கும். உப்புமாவில் ரவை பயன்படுத்துவோம்; இதில், அரிசி மாவும், தயிரும் பயன்படுத்த வேண்டும்.
தேவையான பொருட்கள்
* அரிசி மாவு - 200 கிராம்
* தயிர் - 200 மில்லி
* மோர் மிளகாய் - 10
* கறிவேப்பிலை - சிறிதளவு
* நெய் - 3 ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 50 மில்லி
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
* பெருங்காயம் - ஒரு ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
செய்முறை
வாணலியில் 200 கிராம் அரிசி மாவு, 200 மில்லி தயிர், அரிசி மாவு அளந்த கப் அளவில் இரண்டரை மடங்கு தண்ணீர் ஊற்றி, மூன்றையும் நன்றாக கலக்கவும்
பெரிய வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பத்து மோர் மிளகாயை பாதியாக உடைத்து போட்டு வறுக்கவும்
அடுத்து ஒரு டீஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் உளுந்தம் பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் பெருங்காயம் போட்டு வறுக்கவும்
பின் அரிசி மாவு, தயிர், தண்ணீர் கலவையை ஊற்றி கிண்ட ஆரம்பிக்கவும். மிதமான சூட்டில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிண்டி கொண்டே இருக்க வேண்டும்
ஆரம்பத்திலேயே சொன்னது போல இது உப்புமா செய்முறை தான். தண்ணீர் வற்றி மோர் களி தயாராகும்
களி ஓரளவு கெட்டியானதும் தேவையான அளவு உப்பு சேருங்கள். இப்போது மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிண்டுவதை தொடருங்கள்
மோர் களி கெட்டியான பிறகு அடுப்பை ஆப் செய்து, ஒரு சதுர வடிவிலான பாத்திரத்திற்கு மாற்றி, அரைமணி நேரம் ஆறவிடவும்
சிலர் அப்படியே சாப்பிட விரும்புவர். ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்
ஆறவிட்ட மோர் களி, கேக் போல மாறிவிடும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்
பேனில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் ரோஸ்ட் செய்வது போல மோர் களி துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்.
