ADDED : அக் 05, 2025 01:37 PM

தேவையான பொருட்கள்:
காரல் மீன் - அரை கிலோ
தேங்காய் - அரை முடி
பச்சை மிளகாய் - மூன்று
சீரகத்துாள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்துாள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்துாள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - ஒன்று
சின்ன வெங்காயம் - ஐந்து
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயை துருவி இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய் பாலுடன், சீரகத்துாள், சோம்புத்துாள், மஞ்சள்துாள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், சுத்தம் செய்த காரல் மீனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை, சேர்த்து இறக்கவும். எலுமிச்சை பழத்தை ருசிக்கு ஏற்றவாறு பிழிந்து விடவும். பின்னர் வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளித்து சொதியில் ஊற்றினால் சூப்பரான சுவையான காரல் மீன் சொதி தயார்.தமிழகக் கடலோரக் கிராமங்களில் பெண்கள் மகப்பேறு காலத்திலும், பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் காரல் மீனை அவித்து, சாறு எடுத்துக் குடிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.