/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
உறைய வைக்கும் பர்வத மலை பயணம்- மிஸ் பண்ணாதீங்க!
/
உறைய வைக்கும் பர்வத மலை பயணம்- மிஸ் பண்ணாதீங்க!
UPDATED : டிச 16, 2022 11:47 PM
ADDED : டிச 16, 2022 09:25 PM

ஆன்மிகம், த்ர்ல்லிங்கான பயண அனுபவத்துடன் வார விடுமுறை கழிக்க விரும்புவோர்க்கு இந்த இடம் சூப்பர் சாய்ஸாக இருக்கும். ஆம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வத மலை பயணம் ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
மலைகளுக்கு எல்லாம் அரசன் என அழைக்கப்படும் இந்த பர்வத மலை திருவண்ணாமலையிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல திருவண்ணாமலையிலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆன்மிக சுற்றுலாவிற்கு முக்கிய இடமாகப் பார்க்கப்படும் இந்த மலை 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
மலை அடிவாரத்திலிருந்து 1263 படிக்கட்டுகளைக் கடந்து சுமார் 3மணி நேரம் மலைப்பாதையில் பயணித்து மேல் பகுதியை அடையவது ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும். இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடி வழி என இருவழிகள் உள்ளன.
|
பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும், தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேருகின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாகக் காணப்படும். இதற்குக் குமரி நெட்டு என்று பெயர். இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த நீர் ஊற்று ஒன்று உள்ளது.
![]() |
![]() |
![]() |
மலையேறுபவர்கள் தங்களுக்குத் தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மலைப் பாதையில் வழித் துணையாக நாய்கள் வருகிறது என்பது சிறப்பம்சமாகும். இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறது.
4560 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் உள்ளது.இது கி.பி. 3ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
இந்த மலைக் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாகப் பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இதையும் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியது என்றும், சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரைச் சேமித்து வைக்கும் விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.
![]() |






