sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

/

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்


PUBLISHED ON : செப் 14, 2025

Google News

PUBLISHED ON : செப் 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வாழ்க்கை வாய்ப்பு மட்டும்தான் தரும்; அதை தக்க வைச்சுக்க வேண்டியது நம்ம பொறுப்பு. அதுக்கு உங்க பலம் என்னன்னு உங்களுக்குத் தெரியணும்!'

யார் குரல்? : பொன்னி

வயது : 47

அடையாளம் : திருநங்கை

தன்னை அறிந்த தருணம்

சிறுவயதிலிருந்து பொன்னி நேசித்தது இரண்டு விஷயங்கள்; ஒன்று நடனம், மற்றொன்று படிப்பு! பக்கத்து வீட்டு கொழுக் கட்டைக்காக தனக்குத் தெரிந்த அடவுகளில் ஆடியவரை, 'நீ பொண்ணு மாதிரி நளினமா ஆடுறே; முறையா நடனம் கத்துக்கோ' என அவ்வீட்டு அக்காக்கள் ஆசை விதைத்திருக்கின்றனர்!

'அவங்க தந்த உற்சாகம், அடவுகள் மேல இருந்த ஆசை... உள்ளூர்ல இருந்த டான்ஸ் ஸ்கூல்ல சேர வாய்ப்பு கேட்டேன். அவங்க என்னை சேர்த்துக்கலை!' - பொன்னியின் குரலில் இன்னும் அந்த ஏமாற்றத் தின் வலி!

அதற்காக விட்டுவிட வில்லை; விடாமுயற்சி யோடு, 2022ல் மாவட்ட இசைப்பள்ளியில் பரதம் பயின்று தன் கனவை நிஜமாக்கியிருக்கிறார்

மூன்றாண்டு பயிற்சி; 2024ம் ஆண்டு விழுப்புரம் கூவாகம் விழாவில் முதல் பரிசு. அது தந்த ஊக்கத்தால், 'அபிநயா நிருத்யாலயா' நிறுவி, சென்னை, கொருக்குப்பேட்டை குழந்தை களுக்கு பரதம் கற்றுத் தந்திருக்கிறார்.

ஆசானாய் அந்நாள்

'கலையை கத்துக் கிட்டா மட்டும் போதுமா; அந்த திறமை மேடையேற வேண்டாமா... கொருக் குப்பேட்டை பகுதி திரு விழாவுல அரங்கேற்றத் துக்கு மேடை கேட்டேன்; 10க்கு 10 அளவுல மேடை கிடைச்சது; என் மாணவர்களை பரத கலைஞர்களா உணர வைச்சேன்!' - சிலிர்த்துச் சிரிக்கும் பொன்னிக்கு .. .

பரதத்தோடு கணிதமும் கைகூடி வர, இளநிலை கணிதத்தில் பட்டம். இப்போதும் தான் வசித்து வரும் துாத்துக்குடி, வசவப்பபுரம் சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்க ளுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கணக்கு பாடம் பயிற்றுவிக்கிறார்!

'கலைங்கிறது குழந்தை மாதிரி; நேசிக்கிற வங்ககிட்டே அது ஒட்டிக்கும். அதுக்கு பாகுபாடு காட்டத் தெரியாது. ஆனா, கலையை ரசிக் கிறவங்க கலைஞர் கள்கிட்டே பாகுபாடு காட்டு றாங்க; சில திருநங்கைகள் செய்ற தப்புக்கு எல்லாரை யும் சந்தேகப்படுறாங்க! என் கலையும் கல் வியும் இந்த பார்வையை கண்டிப்பா சரி பண்ணும்! ' - நம்பிக் கை யுடன் சொல்பவருக்கு, 'சிறந்த திருநங்கை - 2025' விருது தந்து கவுரவித் திருக்கிறது தமிழக அரசு.

தற்போது தாமிரபரணி கரையோ ரத்து கோவில் சிற்பங்களில் மிளிரும் கலை குறித்து முனைவர் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார் பொன்னி.

குறள் சொல்லும் குரல்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்

பொருள்: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்பவருக்கு முடியாதது ஒன்றுமில்லை.






      Dinamalar
      Follow us