sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

/

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்


PUBLISHED ON : செப் 14, 2025

Google News

PUBLISHED ON : செப் 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வாழ்க்கை வாய்ப்பு மட்டும்தான் தரும்; அதை தக்க வைச்சுக்க வேண்டியது நம்ம பொறுப்பு. அதுக்கு உங்க பலம் என்னன்னு உங்களுக்குத் தெரியணும்!'

யார் குரல்? : பொன்னி

வயது : 47

அடையாளம் : திருநங்கை

தன்னை அறிந்த தருணம்

சிறுவயதிலிருந்து பொன்னி நேசித்தது இரண்டு விஷயங்கள்; ஒன்று நடனம், மற்றொன்று படிப்பு! பக்கத்து வீட்டு கொழுக் கட்டைக்காக தனக்குத் தெரிந்த அடவுகளில் ஆடியவரை, 'நீ பொண்ணு மாதிரி நளினமா ஆடுறே; முறையா நடனம் கத்துக்கோ' என அவ்வீட்டு அக்காக்கள் ஆசை விதைத்திருக்கின்றனர்!

'அவங்க தந்த உற்சாகம், அடவுகள் மேல இருந்த ஆசை... உள்ளூர்ல இருந்த டான்ஸ் ஸ்கூல்ல சேர வாய்ப்பு கேட்டேன். அவங்க என்னை சேர்த்துக்கலை!' - பொன்னியின் குரலில் இன்னும் அந்த ஏமாற்றத் தின் வலி!

அதற்காக விட்டுவிட வில்லை; விடாமுயற்சி யோடு, 2022ல் மாவட்ட இசைப்பள்ளியில் பரதம் பயின்று தன் கனவை நிஜமாக்கியிருக்கிறார்

மூன்றாண்டு பயிற்சி; 2024ம் ஆண்டு விழுப்புரம் கூவாகம் விழாவில் முதல் பரிசு. அது தந்த ஊக்கத்தால், 'அபிநயா நிருத்யாலயா' நிறுவி, சென்னை, கொருக்குப்பேட்டை குழந்தை களுக்கு பரதம் கற்றுத் தந்திருக்கிறார்.

ஆசானாய் அந்நாள்

'கலையை கத்துக் கிட்டா மட்டும் போதுமா; அந்த திறமை மேடையேற வேண்டாமா... கொருக் குப்பேட்டை பகுதி திரு விழாவுல அரங்கேற்றத் துக்கு மேடை கேட்டேன்; 10க்கு 10 அளவுல மேடை கிடைச்சது; என் மாணவர்களை பரத கலைஞர்களா உணர வைச்சேன்!' - சிலிர்த்துச் சிரிக்கும் பொன்னிக்கு .. .

பரதத்தோடு கணிதமும் கைகூடி வர, இளநிலை கணிதத்தில் பட்டம். இப்போதும் தான் வசித்து வரும் துாத்துக்குடி, வசவப்பபுரம் சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்க ளுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கணக்கு பாடம் பயிற்றுவிக்கிறார்!

'கலைங்கிறது குழந்தை மாதிரி; நேசிக்கிற வங்ககிட்டே அது ஒட்டிக்கும். அதுக்கு பாகுபாடு காட்டத் தெரியாது. ஆனா, கலையை ரசிக் கிறவங்க கலைஞர் கள்கிட்டே பாகுபாடு காட்டு றாங்க; சில திருநங்கைகள் செய்ற தப்புக்கு எல்லாரை யும் சந்தேகப்படுறாங்க! என் கலையும் கல் வியும் இந்த பார்வையை கண்டிப்பா சரி பண்ணும்! ' - நம்பிக் கை யுடன் சொல்பவருக்கு, 'சிறந்த திருநங்கை - 2025' விருது தந்து கவுரவித் திருக்கிறது தமிழக அரசு.

தற்போது தாமிரபரணி கரையோ ரத்து கோவில் சிற்பங்களில் மிளிரும் கலை குறித்து முனைவர் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார் பொன்னி.

குறள் சொல்லும் குரல்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்

பொருள்: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்பவருக்கு முடியாதது ஒன்றுமில்லை.






      Dinamalar
      Follow us