sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

காலநிலை மாற்றங்களிலும் நிலைத்திருக்கும் மரக்கதவுகள்: எதிர்காலத்தில் வீட்டு உரிமையாளருக்கும் சிறந்த முதலீடு

/

காலநிலை மாற்றங்களிலும் நிலைத்திருக்கும் மரக்கதவுகள்: எதிர்காலத்தில் வீட்டு உரிமையாளருக்கும் சிறந்த முதலீடு

காலநிலை மாற்றங்களிலும் நிலைத்திருக்கும் மரக்கதவுகள்: எதிர்காலத்தில் வீட்டு உரிமையாளருக்கும் சிறந்த முதலீடு

காலநிலை மாற்றங்களிலும் நிலைத்திருக்கும் மரக்கதவுகள்: எதிர்காலத்தில் வீட்டு உரிமையாளருக்கும் சிறந்த முதலீடு


ADDED : அக் 04, 2024 11:38 PM

Google News

ADDED : அக் 04, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்களின் அழகு, நீடித்துவம் மற்றும் இயற்கை அழகு ஆகியன கட்டட துறையில் நீண்டகாலமாக கொண்டாடப்படுகின்றன. பல நுாற்றாண்டுகளாக கட்டட கலை வடிவமைப்பு மற்றும் இதற்கான அடிப்படை கூறுகள், செயல்முறை அம்சங்கள் எந்த வீட்டையும் அழகு செய்யும் வசீகர கலையை வழங்குகின்றன.

கட்டுமான பொருட்களில் நவீன முன்னேற்றங்கள் இருந்தாலும், மரம் அதன் பல்வகை, நிலைத்தன்மை மற்றும் ஈர்ப்பிற்காக அனைவராலும் முன்னிறுத்தப்படும் தேர்வாக உள்ளது. பாரம்பரிய குடியிப்பு, நவீன குடியிருப்பு என எதுவானாலும், மரக்கதவுகள், ஜன்னல்கள் இயற்கை அழகு மற்றும் நுணுக்கத்தை சேர்க்கின்றன.

இதன் வாயிலாக வீடுகளின் வடிவமைப்புக்கு ஏற்ப தனிப்பயன் செய்ய முடிகிறது. ஓக், மகோனே, பைன் மற்றும் தேக்கு போன்ற வெவ்வேறு மரங்களின் நெளிவு வடிவங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் நிறங்கள், மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமான அழகை வழங்குகின்றன.

'காட்சியா' உறுப்பினர் பிரவீன்குமார் நம்மிடம் பகிர்ந்துகொண்டாதாவது...

சரியாக பராமரிக்கப்பட்டால், மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மிகவும் நீடித்து உழைக்க கூடியவை. ஓக், வால்நட், தேக்கு மற்றும் மகோனே போன்ற கடினமரங்கள் குறிப்பாக வலிமையானவை மற்றும் கடும் காலநிலைப் பருவங்களில் நிலைத்திருக்கும்.

மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வீட்டின் உள் வெப்பத்தை பராமரிக்க உதவுகின்றன. குளிர்காலங்களில் சூடாகவும், கோடையில் குளிராகவும் வைத்திருக்க உதவுகிறது. மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்களை பயன்படுத்துவதின் முக்கிய பயன்களில் ஒன்றாக, அவை சூழலுக்கு உகந்தவையாக உள்ளன.

மரம் ஒரு புதுப்பிக்கக்கூடிய வளமாக இருக்கிறது. குறிப்பாக மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்களின் உற்பத்தி செயல்முறை பொதுவாக பி.வி.சி., அல்லது அலுமினியம் போன்ற பொருட்களோடு ஒப்பிடுகையில் குறைந்த கார்பன் வெளியீட்டு அடிப்படையாக உள்ளது.

மரம் சிதைவதற்குப் பின்னர், சுற்றுச்சூழலுக்கு குறைந்த தீங்குகளை ஏற்படுத்துகிறது.மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பல பயன்களை வழங்கினாலும், சில சவால்களையும் வழங்குகின்றன. மரம் முறையாக பராமரிக்கப்படாவிட்டால், ஈரத்தினால் மற்றும் பூச்சிகளால் சேதத்திற்கு உள்ளாகிறது. முற்றிலும் நிலைத்திருப்பதற்கும், சேதமடையாமல் தடுப்பதற்கும் தொடர் பராமரிப்பு அவசியம்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்களை எதிர்கால பருவங்களில் பாதுகாக்கும் மேம்படுத்தல்கள் வழங்கியுள்ளது. அழுத்தமான சிகிச்சைகள், நீர் எதிர்ப்புப் பூச்சு மற்றும் யு.வி., பாதுகாப்பு 'பினிசிங்' ஆகியன மரத்தை ஒரு வலிமையான பொருளாக மாற்றியுள்ளன.

மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள்உடைய வீடுகள், அவர்களது அழகியல் ஈர்ப்பும், நீடித்துவமும் காரணமாக, பொதுவாக மேலான மறுவிற்பனை மதிப்பை கொண்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் விற்கும் வாய்ப்பு உள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு சிறந்த முதலீடாகும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us