sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2.5 லிட்டர் தண்ணீர்!

/

இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2.5 லிட்டர் தண்ணீர்!

இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2.5 லிட்டர் தண்ணீர்!

இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2.5 லிட்டர் தண்ணீர்!


PUBLISHED ON : ஏப் 06, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல் எடை சராசரியாக 60 - 65 கிலோ இருப்பவர்களுக்கு, சிறுநீரகச் செயல்பாடு இயல்பாக இருந்தால், 24 மணி நேரத்தில் 1,200 - 1,500 மில்லி சிறுநீர் வெளியேறும்.

இது கோடைக்காலம் என்பதால், வெளியேறும் சிறுநீர் அளவு குறையலாம். 1,500 மில்லி சிறுநீர் வெளியேற வேண்டும் என்றால், அதைவிட அதிகமாக 2,500 - 3,000 மில்லி திரவம் குடிக்க வேண்டும்.

அதற்கு, நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெள்ளரி போன்ற பழங்கள், காய்கறிகள், மோர், இளநீர், நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீர் தவிர, வியர்வை வழியாகவும், சுவாசக் காற்றிலும் 500 - 750 மில்லி வரை நீர் வெளியேறலாம்.

மேலும், 24 மணி நேரத்தில் 2,500 மில்லி அளவு திரவ ஆகாரம் எடுத்துக் கொண்டால், வெளியேறும் சிறுநீர் அளவு 1,200 மில்லி இருக்கும்.

இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் திரவ ஆகாரம் குறைவாக குடிக்க பரிந்துரைப்போம். இவர்கள், 1,500 - 2,000 மில்லி திரவ ஆகாரம் குடிப்பதால், அதிகமாக தொந்தரவு இருக்காது.போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகத் தொற்று ஏற்படும்.

சிலருக்கு அடர்த்தியாக இருந்தால் சிறுநீரகப் பாதிப்பு இருக்கலாம். சிறுநீரகக் கோளாறு இருந்தால், சிறுநீரில் புரதம் வெளியேறும். இதனாலும் அடர்த்தியாகலாம். இதற்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

டாக்டர் எம்.தீபக்,

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், எஸ்.ஆர்.எம். மருத்துவமனை,

சென்னை

96444 96444


info@srmglobalhospitals.com






      Dinamalar
      Follow us