sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நோய்கள் ஜாக்கிரதை: அகமண முறை தேவைதானா?

நோய்கள் ஜாக்கிரதை: அகமண முறை தேவைதானா?

நோய்கள் ஜாக்கிரதை: அகமண முறை தேவைதானா?


PUBLISHED ON : பிப் 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாற்றுத்திறனாளிகள், உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றனர்; காரணம், சொந்தத்திற்குள் திருமணம் நடப்பது தான்! அந்நியம், என்று நினைத்து நாம் மணம் முடிப்பது கூட, நேரடியான ரத்த உறவாக இல்லாமல் போகலாம்; ஆனால், ஒரே ஜாதிக்குள்தான், அதுவும் நடக்கிறது.ஜாதி என்பது, தலைமுறை தலைமுறையாக, ரத்த உறவுக்குள் மணம் முடித்து, உருவான ஒரு குழு என்கின்றனர், மரபணு ஆய்வாளர்கள்.

மரபணு மூலம் ஏற்படக்கூடிய, 3,000 வகையிலான நிரந்தர ஊனங்களோடு, சில வகையான மருத்துவ ஊனங்கள், தமிழகத்திலும், ஆந்திராவிலும் மட்டுமே இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம், சொல்கிறது. தசைநார் தேய்வு, உதடுகள் பிளவு, டவுன் சிண்ட்ரோம், சிக்கல் செல் அனீமியா, தலசீமியா, நீரிழிவு, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியான கருக்கலைப்புகள் எல்லாம், (அதாவது கருவிலிருக்கும் குழந்தை குறைபாடுடையதாக இருந்தால், மருத்துவ சட்டப்படி கருக்கலைப்பு செய்வது) மரபணுக் குறைபாடுகளால் வரக் கூடியதே.இதயநோய், வருவதற்கு காரணமாக உள்ள நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை, மரபணு வழியாகவே வருகின்றன என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், பொதுவாக, 50 வயதிற்கு பின் வரக்கூடிய இதயநோய்கள், உறவு முறையில் திருமணம் செய்தோரின் குழந்தைகளுக்கு, 35, 40 வயதில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆணின் உயிரணுக்களும், பெண்ணின் கருமுட்டையும் இணையும் போது, இருவரின் மரபணுக்களும் இணைகின்றன. அதில், இருவரிடமும் இருக்கும், குறைபாடுள்ள மரபணுக்களும் இணைகின்றன. பொதுவாக குறைபாடுடைய அணுக்களே, ஆதிக்க குணம் கொண்டவை. இந்த குறைபாடுடைய அணுக்களே, மரபணுக் குறைபாடுகள், நிரந்தர ஊனங்கள், குணப்படுத்த இயலாத நோய்களை உருவாக்குகின்றன.

- அரவிந்த் ராமநாதன்,

மரபியல் ஆராய்ச்சி நிபுணர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us