தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பூஞ்சைக்கு ஊட்டமளிக்கும் ரத்த சர்க்கரை!

பூஞ்சைக்கு ஊட்டமளிக்கும் ரத்த சர்க்கரை!

பூஞ்சைக்கு ஊட்டமளிக்கும் ரத்த சர்க்கரை!


PUBLISHED ON : ஏப் 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்க்கரை கோளாறும், ஈறு சம்பந்தமான கோளாறும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக தொடர்பு உடையவை என பல ஆய்வுகள் கூறுகின்றன.

கட்டுப்பாடற்ற சர்க்கரை கோளாறால் ரத்தத்தில் அதிகமான சர்க்கரை இருக்கும். இதனால், ஈறுகளுக்கு வரும் ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை காரணமாக, அதிக அளவில் பாக்டீரியாக்கள் தங்கி, ஈறுகளில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல அதிகப்படியான ஈறு தொற்று, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கவும் செய்யும்.

சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு, எச்சில் சுரப்பது குறைவதால், வாயில் வறட்சி ஏற்படலாம். வாயில் எரிச்சல், புண் ஏற்படலாம்; ஈறுகள் வீங்கி தொற்று ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படலாம். ஈறுகளில் ஏற்படும் தொற்று, பற்களை சுற்றியுள்ள எலும்பு மற்றும் வெளிப்புறத் திசுக்களில் தொற்றை ஏற்படுத்த, ஈறுகளில் கொப்பளங்களாக மாறலாம்.

கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எச்சிலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையில் பூஞ்சைகள் நன்றாக உயிர் வாழும். இதனால் எளிதாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு, வாயில் ஆங்காங்கே வெள்ளை நிறத் திட்டுகள் காணப்படும். வாயில் காயம் ஏற்பட்டால், குணமாக அதிக நாட்கள் ஆகலாம். சாப்பிடும் உணவுகளின் சுவை மாறுபடலாம். புகை பழக்கம் உள்ளவர்களுக்கு இப்பிரச்னைகள் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

எந்த அளவிற்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு ஈறு அல்லது பிற வாய் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படாது.

தினமும் இரு வேளை மென்மையான பிரஷைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும். ஈறு பிரச்னை ஆரம்ப நிலையில் இருந்தால், 'பிளாசிங்' முறையை, பல் மருத்துவர் ஆலோசனையுடன் தினமும் உபயோகிக்க வேண்டும். வெதுவெதுப்பான உப்பு தண்ணீரில் வாயை இரவு நேரங்களில் கொப்பளிக்கலாம்.

ஆண்டிற்கு இரு முறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும் போது, சர்க்கரை கோளாறு உள்ள விஷயத்தையும், சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்க்கரையின் அளவையும் தவறாமல் தெரியப்படுத்த வேண்டும்.

ஈறு தொடர்பான பிரச்னைகளை ஈறு சிகிச்சை நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும். நம் பற்களை உறுதியாக வைத்திருப்பது ஈறுகள் தான். ஆகையால், ஈறு பிரச்னைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், இயற்கையான பற்களை இழக்க நேரிடும்.

டாக்டர் ஆர்.வி.அபராஜிதா,

வேர் சிகிச்சை சிறப்பு பல் மருத்துவர்,

சென்னை

97919 06962

drrvaparajitha@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us