sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள்!

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள்!

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள்!


PUBLISHED ON : ஜூன் 28, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருந்து, மாத்திரைகளை விட உணவு முறைகளை முறையாக பின்பற்றினாலே சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாம். பெரும்பாலும் கசப்பு தன்மை உள்ள பாகற்காய், சோற்றுக்கற்றாழை, நாவல் பழக்கொட்டை, வெந்தயம், தக்காளி முதலியவை, ரத்தத்தில் உள்ள

சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.

தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பாகற்காய்: நார்ச்சத்து கொண்டது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் சக்தி கொண்டது. பாகற்காயை அவித்தும், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். தக்காளி சேர்த்து சமைத்தால் கசப்பு தன்மை குறையும்.

வெந்தயம்: வெந்தயம் எளிதில் கிடைக்ககூடியது.

வெந்தயத்தை தண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து, ஒரு ஸ்பூன் தினமும் மோர் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை தண்ணீரில், 8 மணிநேரம் ஊறவைத்து வாயில் மென்று சாப்பிடலாம். அதிக அளவு கசக்காது. இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது வெந்தயத்தை முளைகட்டி உலர வைத்து பொடியாக்கி சாப்பிடலாம்.

பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப்பழத்தை சாப்பிட வேண்டும். வாழை, மாம்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் அதிகமாக உண்ணக் கூடாது.

நாவல் பழம்,- கொட்டை: நாவல்பழம், நாவல் கொட்டை ஆகிய இரண்டும் நீரழிவை கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. சாப்பிடும் போது பழம் மட்டுமல்லாமல், அதன் கொட்டையையும் மென்று சாப்பிடலாம். சீசன் அல்லாத நேரங்களில் நாவல் பழக்கொட்டை பொடியை, கடைகளில் வாங்கி தினமும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.

அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

வேப்பிலை: தினமும் அல்லது வாரத்திற்கு, 5 நாட்கள் வேப்பிலையை 2 கை அளவு பறித்து அதை நன்றாக கழுவி பிறகு, 400 மில்லி தண்ணீர் விட்டு அவித்து அதை, 100 மில்லியாக வந்த பிறகு அந்த கசாயத்தை ஆற வைத்து குடிக்கலாம். பச்சையாக வேப்பிலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை காயவைத்து அதை பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் கலந்தும் குடிக்கலாம். அல்லது வேப்பம்பூவை பொறியலாக சமைத்தும் சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது இது. அது மட்டும் அல்ல குடலில் உள்ள பூச்சிகளையும் அழித்து விடும்.

குறிப்பு: டாக்டரின் ஆலோசனை பெற்று, இந்த மருத்துவமுறைகளை பின்பற்றுவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us