
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண் பாதுகாப்பில் கவனம்
தினமும் இரவு படுக்கும் முன், இரு துளி விளக்கெண்ணெயை, கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள்
பிரகாசமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்திற்கு ஒருமுறை, இரு துளி சுத்தமான தேங்காய் எண்ணெயை, கண்களை சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.
சிறிது பாதாமை, பால் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி வர, கண்களைச் சுற்றியுள்ள கரு வளையங்கள் நீங்கும்.
தினமும், கண்களுக்கான சிறு பயிற்சிகளை செய்து வருவதன் மூலம், கண் பார்வை மேம்படும்
தினமும், வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து, 10 நிமிடம் அமர, கண்களில் உள்ள சோர்வு
மற்றும் கரு வளையங்கள் நீங்கும்.

