sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மயக்கத்தில் எத்தனை வகை?

/

மயக்கத்தில் எத்தனை வகை?

மயக்கத்தில் எத்தனை வகை?

மயக்கத்தில் எத்தனை வகை?


PUBLISHED ON : மே 20, 2015

Google News

PUBLISHED ON : மே 20, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதர்களின் வாழ்வில் பலவிதமான மயக்கங்கள் உண்டு. அவை வாழ்வை ரசனையாக்க உதவுகின்றன. அதேவேளையில், நாம் நன்றாக இருக்கும் போதே, திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு, மூளை வேலைநிறுத்தம் செய்ய, தடாலடியாகக் கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை கண்டு அஞ்சுகிறோம்.

உடல் சார்ந்த மயக்கத்தில், 'குறு மயக்கம், நெடு மயக்கம்' என, இரு வகை உண்டு. பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும், திடீரென்று யாராவது மயக்கமடைந்து விழுந்தால், அது, குறு மயக்கம்.

மூளைக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை ஏற்பட்டால், குறு மயக்கம் ஏற்படுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம், சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது.

மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும், ரத்த ஓட்டம் சரியாகிவிடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது.

காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது, முதல் காரணம். இதை, 'பசி மயக்கம்' என்று கூறுகிறோம். இரவுத் தூக்கம் தேவையான அளவுக்கு இல்லாதது, அடுத்த காரணம். ஒரே இடத்தில், அதிக நேரம் நிற்பது, மூன்றாவது காரணம். குறிப்பாக, வெயிலில் நீண்ட நேரம் நின்றால், மயக்கம் வரும். உடல் சோர்வு, இந்த மயக்கத்தை வரவழைக்கும்.

உணவு புரையேறுதல், தொண்டை அடைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களும், இந்த வகை மயக்கத்தை ஏற்படுத்தும். மயக்கம் அடைந்தவரை அப்புறப்படுத்தி, உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். ஆடைகளின் இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிட்டு, ஆசுவாச படுத்திவிட்டு மருத்துவரை அணுகுங்கள்.

- அருண், நரம்பியல் மருத்துவர்

dr.arum2201@gmail.com






      Dinamalar
      Follow us