PUBLISHED ON : அக் 09, 2022

என்னுடைய பதிவிற்கு யாரும் 'லைக்' போடவில்லை அல்லது நான் நினைத்த எண்ணிக்கையில் லைக் வரவில்லை என்றால் மன அழுத்தம் வந்து விடுகிறது.
லைக் இல்லை என்ற விஷயம் மன அழுத்தத்தை தருவதோடு, சமூக பழக்கம் என்ற ஒன்றில், வளர்ச்சியடைய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. பொழுது போக்கிற்காக இருந்த விஷயங்கள், வாழ்க்கை என்று ஆகிவிட்டதால், உணர்வு, உறவு, மொழி என்று அனைத்தும் பிரச்னையாகி விட்டது.
மனிதனும் மனிதனும் பேசிப் பழகியது போய், மனிதனும் மிஷினும் பழகியதால், உணர்வு ரீதியான பரிமாற்றங்கள் குறையும் போது, நமக்குள் ஒரு வெறுமை வந்து விடுகிறது; அந்த வெறுமையை எப்படி கடப்பது என்பது தெரியவில்லை.
இதனால், மன நல மருத்துவத்தில், 'நோ மோ போபியா' என்ற ஒன்று புதிதாக உள்ளது. 'மொபைல், பேஸ்புக் அடிக் ஷன் சென்டர்'கள் வரத் துவங்கி உள்ளன. சுய கட்டுப்பாடுடன், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஒன்று தான் இதற்கு தீர்வு.
- உலக சுகாதார மையம்
