PUBLISHED ON : ஜூலை 10, 2022

மன அழுத்தம், கோபம், பதற்றம், கவலை என்று என்ன மாதிரியான மன நிலையில் இருந்தாலும், ஒன்று உணவை தவிர்க்கிறோம் அல்லது அதிகமாக சாப்பிடுகிறோம். பசித்து சாப்பிடுவதை விட, ஆசைக்காக சாப்பிடுவதே அதிகம். இப்படி தேவை இல்லாமல் சாப்பிட்டு, உடல் எடை அதிகரித்து, பிரச்னையாக மாறுகிறது.
கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, குழந்தைகளையும் உடல் பருமன் உடையவர்களாக மாற்றி விட்டனர் பெற்றோர். இது ஒரு நோய். தனி நபர் முயற்சி எடுத்தால் தவிர, இந்தப் பிரச்னையை சரி செய்யவே முடியாது.
எந்த உணவு நல்ல உணவு; எதில் என்ன சத்து இருக்கிறது. 'ஆர்கானிக்' முறையில் விளைந்த காய்கறியா, பழமா என்று தேர்வு செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து உள்ளது.
தேர்வு செய்து சாப்பிட்டாலும், நோய் பாதிப்பு குறையவில்லை; அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காரணம், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளாமல், உணவை தேர்வு செய்வதில் பலன் இல்லை.
சமைத்த உணவை செரிப்பதற்கும், சமைக்காத உணவை செரிப்பதற்கும் தனித் தனி செரிமான அமிலங்கள் சுரக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், செரிமான கோளாறுகள் வரும்; உடல் பருமன் அதிகரிக்கும்.
- உலக சுகாதார மையம்
