PUBLISHED ON : மே 15, 2022

கொரோனா வைரஸ் தொற்று சில இடங்களில் முடிவுக்கு வந்து விட்டது; சில இடங்களில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது என்றால், இருந்த இடமே தெரியாமல் வைரசை அழித்து விட்டோம் என்று அர்த்தம் இல்லை.
'உன்னை அழிக்க எங்களால் முடியாது; அதனால், நாம் இருவரும் கைகோர்த்து ஒற்றுமையாக பிரச்னைகளை எதிர்கொள்வோம்' என்று கொரோனா வைரசிடம் சொல்லி, அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்பது தான், முடிவுக்கு வந்து விட்டது என்பதற்கான உண்மையான பொருள்.
போலியோ, அம்மை போன்ற தொற்றுகள் முடிவுக்கு வரவில்லை; ஆனாலும், அவற்றை முற்றிலும் ஒழித்து விட்டோம். அது தான் வெற்றி. கொரோனா அப்படி இல்லை. 'ப்ளூ' போன்று ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பருவத்தில் வரும். பலரைத் தாக்கும்; சிலர் உயிரிழக்கலாம். எல்லா நாட்டிற்கும் பொதுவான நியதி இது.
புதிய வகை வைரஸ் வந்தால், அது இதைக் காட்டிலும் அழிவை ஏற்படுத்தலாம்.
டாக்டர் பஹீம் யூனஸ்,
தலைவர், தொற்று நோய் பிரிவு, மெரிலேண்ட் பல்கலைக்கழகம்,
அமெரிக்கா.
