PUBLISHED ON : மார் 27, 2022

அமெரிக்காவில் உள்ள ஈஷா மையத்தில், எட்டு நாட்கள் நடந்த தியான பயிற்சியில், தினமும் 10 மணி நேரம் தியானம், சத்தான சைவ உணவு, சரியான நேரத்திற்கு துாக்கம் என்று அமைதியான சூழலில் பயிற்சி தரப்பட்டது.
பயிற்சி தருவதற்கு ஐந்து - எட்டு வாரங்கள் முன், பயிற்சி பெற்ற மூன்று மாதங்களுக்குள் இவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதை ஆய்வு செய்ததில், தியானத்திற்கு பின் உடலில் பல மாற்றங்கள் நடந்துள்ளது உறுதியானது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில், 220 வகையான மரபணுக்களும், தொற்றுக் கிருமிகள் உள்ளே நுழைவதை அடையாளம் கண்டு சொல்லும் 68 மரபணுக்களின் செயல் திறனில் வியப்பான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது தெரிந்தது.
கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பாதித்தவர்களுக்கு, உடலின் உள்ளே நுழையும் நோய் கிருமிகளை அடையாளம் காணும் இந்த மரபணுக்கள் பலவீனமாக இருந்ததும் ஒரு காரணம். மருந்து இல்லாமல், தியானம் வாயிலாக, இந்த மரபணுக்களை வலிமையாக்க முடியும் என்பது, முதல் முறையாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
- விஜயேந்திரன் சந்திரன்,
குழந்தைகள் நல மருத்துவர்,
புளோரிடா காலேஜ் ஆப் மெடிசின், அமெரிக்கா.
