PUBLISHED ON : அக் 24, 2021

அ நிறம் | அளவு
மொபைல் போனின் நீல நிற ஒளியிலிருந்து வெளிப்படும் வேதி விளைவுகள், விழித்திரையை பாதித்து சிதைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது. நீல நிற ஒளி எத்தனை நாட்கள் தொடர்ந்து கண்களில் பட்டால், பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.
கண்களுக்கு அருகில் பொருட்கள் வர வர, கண்களின் தசைகள் அதிக அளவில் வேலை செய்யும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின், கண்களில் எரிச்சல், தலைவலி, நீர் வடிவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் மொபைல் பயன்படுத்தும் நமக்கு பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால், மொபைல் யுகத்தில் பிறந்த முதல் நாளிலிருந்து, இந்த ஊதா ஒளியை பார்த்தே வளரும் குழந்தைகளுக்கு 30 வயதிற்குள் பாதிப்பு ஏற்படலாம்.
ஆதாரம்: அகர்வால் கண் மருத்துவமனை
