sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

திருஷ்டிக்கு மட்டுமல்ல...!

/

திருஷ்டிக்கு மட்டுமல்ல...!

திருஷ்டிக்கு மட்டுமல்ல...!

திருஷ்டிக்கு மட்டுமல்ல...!


PUBLISHED ON : பிப் 26, 2017

Google News

PUBLISHED ON : பிப் 26, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூசணிக்காயில், சர்க்கரைபூசணி, வெண்பூசணி என இரு வகை உண்டு. இரண்டு பூசணிகளுமே, உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. திருஷ்டி கழிக்கவும் பூசணியைப் பயன்படுத்தி வருகிறோம்.

அதிகமான பித்தத்தை நீக்கக்கூடியது. வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலியைப் போக்கவும், நெஞ்சு சளியை நீக்கவும், மூச்சிரைப்பைப் போக்கவும், சிறுநீரகக் கோளாறுகளை அகற்றவும் பயன்படுகிறது.

நாடாப்புழுக்களை வெளியேற்றும் புழுக்கொல்லியாகவும், இந்த முற்றிய காய் பயன்படுகிறது.

வெண்பூசணியின் விதையிலிருந்து, பல மருத்துவ வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன.

சீன மருத்துவத்தில் வெண்பூசணியின் பூவை, மஞ்சள் காமாலை, சீதபேதி, இருமல் ஆகிய நோய்களைப் போக்கப் பயன்படுத்துகின்றனர்.

வெண்பூசணியின் தண்டுப்பகுதி, முறையற்ற மாதவிலக்கை சீர் செய்யவும், சருமத்தில் மேற்புறத் தழும்புகளை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், வேர்ப்பகுதி, மஞ்சள் காமாலை, சிறுநீர் பாதை எரிச்சல், சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. குளிர்ச்சியான குணம் கொண்ட சதைப்பற்றும், பல மருத்துவக் குணங்கள் கொண்டது. இதனாலேயே தீப்புண்களை ஆற்றவும், வீக்கங்களைக் கரைக்கவும், சதைப்பற்றை மருத்துவர்கள் உபயோகிக்கின்றனர்.

சிறுநீரகத்துக்கு பலம்

பூசணி சாறு, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பலம் சேர்க்கிறது. சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களும், பித்தப்பையில் கோளாறு உடையவர்களும் தினம், மூன்று வேளை என, இதன் சாறை, அரை டம்ளர் அளவு, 10 நாட்கள் பருகுவதால், சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கோளாறுகள் தணியும்.

ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை போக்கக்கூடியது. இதனால் மாரடைப்பு உட்பட பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது. ஜீரணத்தை தூண்டி, மலச்சிக்கலையும் போக்கக் கூடியது. அமில சத்தை குறைக்கக்கூடியது; புண்களை ஆற்றக்கூடியது. இது, சிறுநீரகத்தையும், சிறுநீர்ப்பாதையையும் சீர் செய்யக்கூடியது.

தூக்கம் பிடிக்கும்

லேசான மயக்கமூட்டும் தன்மையைப் பெற்றுள்ளதால், தூக்கமின்மையைப் போக்கவல்லது. ஒரு டம்ளர் சாறோடு, சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் தூக்கம் இயல்பாக தூண்டப்படுகிறது. மேலும், உடலுக்குக் குளிர்ச்சி தரும் சிறந்த பானமாக அமைகிறது.

சாறில் அடங்கியிருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தந்து பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பை தருகிறது. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மேலும் துத்தநாகம் ஆகியவை, கொப்புளங்கள், கட்டிகள், வீக்கங்கள், வண்டுக்கடி ஆகியவற்றில் இருந்து விரைவாக குணமடைய செய்கின்றன. சாறை, தலைக்கு தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், தலைமுடி கொட்டும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது.

பூசணியின் உட்புற சதையை, விதைகள் நீக்கி, வேகவைத்து, பிசைந்து பசையாக்கி, புண்களின் மீது வைத்துக் கட்டுவதால், நாட்பட்ட ஆறாத புண்களும் ஆறும். விதைகளை தோல் நீக்கிப் பொடிசெய்து, ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு, தினம் இருவேளை உள்ளுக்கு எடுத்துக் கொள்வதால் சிறுநீரகக் கற்கள் உண்டாவது தவிர்க்கப்படுகிறது. இத்தகைய மருத்துவ குணம் கொண்ட பூசணிக்காயை, உணவில் இருந்து விலக்கி வைக்காது, வாரம் இருமுறை எடுத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பெறுவது உறுதி.






      Dinamalar
      Follow us