sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வியர்வையை தடுக்கலாம்

/

வியர்வையை தடுக்கலாம்

வியர்வையை தடுக்கலாம்

வியர்வையை தடுக்கலாம்


PUBLISHED ON : அக் 25, 2015

Google News

PUBLISHED ON : அக் 25, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலிலுள்ள அசுத்த நீரும், டாக்சின்களும் வியர்வையாக வெளிப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, உடலில் வியர்வை அதிகமாக சுரக்கிறது; துர்நாற்றமும் வீசுகிறது.

இதனால், சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

அதிக உடல் எடை கொண்டவர்கள், மது அருந்துவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, வியர்வை அதிகமாவதுண்டு. ஆனால், சிலருக்கு சாதாரணமாகவே வியர்வை அதிகமாக இருக்கும்.

அதிக வியர்வையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

வினிகர் இரண்டு டீஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் பழ கலவையை கலந்து, உணவுக்கு முன் மூன்று வேளைகளிலும் உட்கொண்டு வந்தால், வியர்வை பிரச்னையை முற்றிலுமாக தவிர்க்கலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறு, அருந்தி வந்தாலும் வியர்வையை கட்டுப்படுத்தலாம்.

பச்சையான உருளைக்கிழங்கு துண்டுகளை சாப்பிடுவதும் ஒரு தீர்வு. சில துண்டுகளை வியர் வை அதிகம் ஏற்படும், கை மற்றும் முகத்தில் பூசுவதாலும், வியர்வை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

சிறிதளவு சூடத்தை, தேங்காய் எண்ணெயில் கரைத்து வியர்வை அதிகரிக்கும் இடங்களில் தடவலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து, அந்த கலவையை பயன்படுத்தி கைகளை நன்றாக மசாஜ் செய்து வந்தால், உள்ளங்கைகளில் ஏற்படும் வியர்வையை கட்டுபடுத்தலாம்.

நாள்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தாலும், அதிக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தலாம். நாள்தோறும் காலை, மாலை என இரண்டு நேரமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் தூய்மையடைவதுடன், புத்துணர்ச்சி பெறுகிறது.






      Dinamalar
      Follow us