உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 27, 2013

அ நிறம் | அளவு
ரமா, கோயம்புத்தூர்: இரவு நேரங்களில் தூங்கும்போது, கனவுத் தொல்லை அதிகமாக உள்ளது. காலையில் எழுந்தால், ஒன்றிரண்டைத் தவிர, எதுவும் நினைவில் இருப்பதில்லையே!
மூளையில் நினைவுத் திறனுக்கென உள்ள பகுதிகள், இரவு நேரத்தில் தான், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும். அதனால் தான், கனவுகள் அதிகம் வருகின்றன. கனவுகளைப் பற்றி, அதிகம் கவலைப்பட வேண்டாம். நினைவுக்கு வரும் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அவை, 'நெகடிவ்' ஆக இருக்கும் பட்சத்தில், கவலை அதிகரிக்கும். எனவே, கனவுகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது நல்லது.
