தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நோய் வராமல் தடுக்க...

நோய் வராமல் தடுக்க...

நோய் வராமல் தடுக்க...


PUBLISHED ON : மே 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இருமல், தும்மலின்போது கைக்குட்டையால் வாய், முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்.

* மூக்கு, கண், வாய், தொடுவதற்கு முன்பும், பின்பும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

* கூட்டமான இடங்களில், பஸ், ரயில், மார்க்கெட், மருத்துவமனை, சினிமா தியேட்டர்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து செல்ல வேண்டும்.

* மிதமான சுடுநீருடன், உப்பு கலந்த கரைசலை பயன்படுத்தி, ஓரிரு நிமிடங்கள் வாய் கொப்பளித்து, தொண்டையையும், தூய்மையான நீரில், மூக்கு துவாரங்கள், கண்கள் மற்றும் கைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

* வெது வெதுப்பான குடிநீரை, அடிக்கடி பருக வேண்டும்.

* குளிர் சாதனப் பெட்டிகளை, வாரம் ஒருமுறை, கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

* பொது இடங்களில் இருமுதல், தும்முதல், துப்புதல் கூடாது.

* பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களிடம் கை குலுக்குதல், அணைத்தல், முத்தமிடுதல், 1 மீ., தூரத்துக்குள் நின்று பேசுதல் கூடாது.

* மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

* சாதாரண, காய்ச்சல் இல்லாத சளிக்கு, உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைய வேண்டும்; பன்றிக் காய்ச்சல் பீதியில் பரிசோதனைக்கு செல்லக் கூடாது.

* அரசு அங்கீகாரம் பெறாத மையங்கள், நபர்களிடம் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us