sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மயக்குவது மட்டுமல்ல கரைக்கவும் பயன்படும்

மயக்குவது மட்டுமல்ல கரைக்கவும் பயன்படும்

மயக்குவது மட்டுமல்ல கரைக்கவும் பயன்படும்


PUBLISHED ON : ஏப் 19, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 19, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லிகைப்பூ வாசத்தில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. அதனால்தான் இதை மன்மதமலர் என்று அழைக்கின்றனர். மல்லிகைப்பூவில் மனதை மயக்கும் வாசனை மட்டுமல்ல, மனிதர்களின் நோயை போக்கும் மருந்தும் உள்ளது. ஓட்டலில் தொடர்ந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு, வயிற்றில் பூச்சி உண்டாகும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலிந்து, சருமத்தில் வெள்ளைத்

திட்டுக்கள் தென்படும். இந்த அறிகுறிகள் தெரிந்தால், நான்கு மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்த வேண்டும்.

இவ்வாறு அருந்தினால், வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழுக்கள் அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்ல, அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தினால், உடல் நலத்துக்கு நல்லது. அதே போல், மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி, அவை காகிதம் போல உலர்ந்த பின், அவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து குடித்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். வேறு சிகிச்சை தேவை இல்லை.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை மென்று விழுங்கினால், உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அவ்வப்போது ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளுக்கும், மல்லிகைப்பூ சிறந்த நிவாரணியாகும். சிலருக்கு மல்லிகை வாசனை, தலை

வலியை ஏற்படுத்தும். ஆனால், தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உண்டு என்பது பலருக்கு தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை, கையில் வைத்து கசக்கி அதனை நெற்றியில் தேய்த்து விட்டால், தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப்பூவில் இருந்து தயாரிக்கப்படும், வாசனை திரவியங்களை உலகளவில் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாசனைக்கு அடிமையானவர்கள், வேறு சென்ட்டை பயன்படுத்துவதில்லை. மல்லிகைப் பூவில் இருந்து, ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடிக்கொண்டால் போதும். மன அழுத்தமும், உடல் சூடும் காணாமல் போய்விடும்.

மல்லிகைப்பூவின் மகத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள், அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்தாக இப்பூவை பயன்படுத்தி வந்துள்ளனர். உடலில் அடிபட்டு வீக்கம் அல்லது சுளுக்கு பிடிப்பு ஏற்பட்டால் மல்லிகைப் பூவை வைத்து கட்டுப்போட்டால் வீக்கமும் வலியும் நீங்கி விடும். உடல் வலி உள்ளவர்கள், படுக்கையில் மல்லிகைப்பூவை தூவி, படுத்து உறங்கினால் வலி நீங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us