sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

சிறுநீரக கற்களை கரைக்கும் வழிகள்

/

சிறுநீரக கற்களை கரைக்கும் வழிகள்

சிறுநீரக கற்களை கரைக்கும் வழிகள்

சிறுநீரக கற்களை கரைக்கும் வழிகள்


PUBLISHED ON : செப் 30, 2018

Google News

PUBLISHED ON : செப் 30, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுநீரக பையில் கல் எவ்வாறு உருவாகிறது?

சிறுநீரக கல் பிரச்னை பரவலாக வரும் நோயாக மாறி வருகிறது. சிறு நீரில் உள்ள கிரிஸ்டல் உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம்) ஒன்று திரண்டு சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாகிறது. சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை வழியாக வெளியேறும். சிறுநீரகத்தில் தான் கல் உற்பத்தியாகி அங்கு தங்கி வளர்கிறது.

சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான அறிகுறிகளை எப்படி உணரலாம்?

சிறுநீர் பையில் கல் உருவாகினால் முதலில் முதுகில் வலி துவங்கும். அது முன்பக்கத்தில் இருந்து வயிற்று பகுதிக்கு மாறி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும். பின் தொடை, உறுப்புக்கு பரவி காய்ச்சல் ஏற்படும். இதுதான் சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறி. பரம்பரையாக சுரப்பியின் அதீத இயக்கம் நோய் தொற்றாலும் வரலாம்.

சிறுநீரக கல்லை வெறியேற்ற என்ன வழி?

தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் தினமும் ஒரு இளநீர், மற்ற காலத்தில் வாரம் இரு முறை இளநீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒரு முறை இதை செய்யலாம்.

அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேக வைத்து, அந்நீரை அருந்தலாம். வாழைத்தண்டு, முள்ளங்கி சாறு, 30 மில்லி அளவு குடித்தால் சிறுநீரக கோளாறு நீங்கி, சிறுநீர் நன்கு பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டினை அதிகம் சாப்பிட வேண்டும். வெள்ளரி, நீராகாரம் தான் சிறுநீரக பிரச்னைக்கு அருமருந்து.

கல் பிரச்னையை தடுக்க எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

உப்பு பிஸ்கட், சிப்ஸ், பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், ஸ்டிராங் காபி, சமையல் சோடா, சமையல் உப்பு, சீஸ், சாஸ், கியூப்ஸ் கோக்கோ, சாக்லேட், குளிர்பானம், மது, புகையிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக கல்லை நீக்க ஓமியோபதி சிகிச்சை பலனளிக்குமா?

இந்த சிகிச்சை கல் உருவாகியுள்ள இடம், வடிவத்தை பொறுத்தே உள்ளது. ஓமியோபதி மருத்துவமுறை நபருக்கு நபர் மாறுபடும். கல் உருவாகியுள்ள இடம், வலியின் தன்மையை பொறுத்து மருந்தை தேர்வு செய்து சிகிச்சை அளிப்பதால், கல் கரைந்து வெளியேறுகிறது. கல் மீண்டும் மீண்டும் உருவாகாமல் தடுக்கும் சிகிச்சை முறை ஓமியோபதியில் உண்டு.

- டாக்டர் மதுமிதா

ஓமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை.

89392 66767







      Dinamalar
      Follow us