sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

/

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?


PUBLISHED ON : ஜூன் 10, 2015

Google News

PUBLISHED ON : ஜூன் 10, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முழு கர்ப்ப காலம் முடிவடையாமல், 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என, அழைக்கப்படுகின்றன.

கர்ப்ப காலத்தில், தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு, பனிக்குடம் உடைந்து கர்ப்ப வாய் திறந்து கொள்ளுதல், நோய்த் தொற்று ஏற்படுதல், கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருத்தல், செயற்கை முறையில் கருத்தரிப்புக்குள்ளான குழந்தைகள், குறைமாத குழந்தைகளாக பிறக்கின்றன. முதல் பிரசவத்தில் தாய்க்கு ஏதேனும்

பிரச்னைகள் ஏற்படுதல் ஆகியவற்றால், இரண்டாவது பிரசவம், குறைபிரசவமாக வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, கருவை சுமந்திருக்கும் தாய், அவரது தாயின் வயிற்றில் வளர்ந்தபோது, ஏதாவது கோளாறுகள் இருந்திருந்தாலும், குறைபிரசவத்திற்கு வாய்ப்புண்டு.

முதல் பிரசவத்தில் குறைமாத குழந்தை பிறந்திருந்தால், இரண்டாவது பிரசவமும், அதேபோல் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

எனினும், காரணமே இல்லாமல் குறைமாதத்தில் குழந்தைகள் பிறப்பதுதான் அதிகமாக நடக்கிறது. குறைபிரசவத்தை எளிதில் தடுக்க முடியாது.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவை, கட்டுக்குள் வைப்பதால் பிரசவ நாட்களை தள்ளிப்போட முடியும். அதேநேரம், குறைமாத குழந்தைகள் பிறப்பது தெய்வகுற்றமும் அல்ல. குழந்தை குறைமாதத்தில் பிறந்தாலும் சரியான சிகிச்சையளித்தால், பெரும்பாலான குழந்தைகளை காப்பாற்ற முடியும். உலகத்தில் ஆண்டிற்கு ஒன்றரை கோடி குறைமாதக் குழந்தைகள் பிறக்கின்றன. அதில், ௧௧ லட்சம் குழந்தைகள் இறந்து விடுகின்றனர். நுரையீரல் முதிர்ச்சியடையாமை, நோய்கிருமித் தாக்கம், மூளையில் ரத்த கசிவு போன்றவையே, குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இறக்க காரணமாகின்றன.

- ஜெ.குமுதா,

ஒய்வு பெற்ற முன்னாள் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்.

பச்சிளம் குழந்தைகள் பிரிவு. அரசு குழந்தைகள் நல மருத்துவமனை எழும்பூர்.

94440 23733






      Dinamalar
      Follow us