sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தெருவிற்கு வந்த வானவில்

/

தெருவிற்கு வந்த வானவில்

தெருவிற்கு வந்த வானவில்

தெருவிற்கு வந்த வானவில்


PUBLISHED ON : ஜன 09, 2017

Google News

PUBLISHED ON : ஜன 09, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானவில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் அழகு. அந்த வானவில்லே தரையிறங்கி வந்துவிட்டதாம். எங்கு? உறையூரில். எப்படி வந்தது? அதற்கு முன் கீழ் உள்ள பாடலைப் படியுங்கள்.

'மாலை விலைபகர்வார் கிள்ளி களைந்தபூச்

சால மருவியதோர் தன்மைத்தால் - காலையே

வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்

பொற்பார் உறந்தை அகம்'

முத்தொள்ளாயிரப் பாடல் இது. இந்தப் பாடல் என்ன சொல்கிறது? மாலை கட்டி விற்கிற பூ வியாபாரிகள் உறைந்தையில் அதிகம். காலை நேரத்தில் பூக்கடைகளைத் திறந்து மாலை தொடுக்கிறார்கள். வேண்டாத சில பூக்களை தெருவிலே எறிகிறார்கள். அவ்வாறு எறிந்த பூக்கள் பல்வேறு நிறம் கொண்டவையாக இருக்கின்றன.

அந்த பல்வேறு நிறப் பூக்கள் ஒன்றை ஒன்று ஒட்டிக்கிடப்பது, வானவில் பூமிக்கடியில் வந்து வீதியில் படுத்திருப்பது போல் தோன்றுகிறதாம்.

உங்கள் மனக்கண்ணில் அழகாகத் தோன்றுகிறதா உறையூர்!






      Dinamalar
      Follow us