sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இருபொருள் தரும் பாடல்

/

இருபொருள் தரும் பாடல்

இருபொருள் தரும் பாடல்

இருபொருள் தரும் பாடல்


PUBLISHED ON : டிச 12, 2016

Google News

PUBLISHED ON : டிச 12, 2016


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலோட்டமாக ஒரு பொருளும், உற்று நோக்கினால் வேறு பொருளும் வரும்படி, ரசித்து பாடல்கள் எழுதினார்கள் புலவர்கள். காளமேகப்புலவர், கம்பர், ஔவையார் என, பலர் இப்படி பாடல் புனைவதில், திறமையானவர்கள். இந்த வகையில், கம்பர் எழுதிய பாடல்களில் ஒன்று:

வெற்றிபுனை தாதகிக்கும் வேம்புக்கும் பெண்ணைக்கும்

சுற்றும் பெருநிழலாய்த் தோன்றுமே- கற்றோர்

திறந்தாங்கும் மன்னு செகந் தாங்கும் எண்ணில்

அறந்தாங்குந் தொண்டை யரசு

இந்தப் பாடலின் பொருள், தாதகி மரம் (திருவாத்தி), பெண்ணை மரம் (பனை), வேம்பு ஆகியவற்றுக்கு நிழல்போல், அரச மரம் நிற்கிறது என்பதே. இதில் வேறு ஒரு பொருள் மறைந்திருக்கிறது.

அந்தக் காலத்தில், மன்னர்கள் தங்களுக்கென்று, ஒரு மரத்தை அடையாளமாக வைத்திருந்தார்கள். திருவாத்தி மரத்தை கொடியில் வைத்திருந்த சோழ அரசன், பனை மரத்தை சின்னமாக வைத்திருந்த சேர அரசன், வேப்ப மரத்தை கொடியில் வைத்திருந்த பாண்டிய அரசன், இந்த மூவருக்கும் அரணாக வட புலத்தில் இருந்து எதிரிகள் வராமல் பாதுகாவலாக இருப்பது, தொண்டை (தொண்டைக் கொடியையும் குறிக்கும்) அரசனின் அரச மரம்தான்.

இப்படி உட்பொருளை பாடலுக்குள் வைத்தது கம்பரின் கவித்திறமை.






      Dinamalar
      Follow us