நாங்க ரெடி! நீங்க ரெடியா? - 10 வகுப்பு தமிழில் மதிப்பெண் அள்ள
நாங்க ரெடி! நீங்க ரெடியா? - 10 வகுப்பு தமிழில் மதிப்பெண் அள்ள
PUBLISHED ON : பிப் 08, 2016
உரிய விடைகளோடு இலக்கணப் பிழை, எழுத்துப் பிழையின்றி கையெழுத்து தெளிவாக இருந்தால் தமிழ்ப்பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறலாம்.
ஒரு மதிப்பெண் புறவய (Objective) வினாக்கள்: செய்யுள் பகுதியில் 10, உரைநடைப்பகுதியில் 10 கேட்கப்படுகின்றன. இவற்றிற்கு உரிய விடையைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடங்களை நிரப்புதல் ஆகியனவற்றைத் தயார் செய்க.
செய்யுள் பகுதியில் 1,2,3,4,5,8,9 இயல்களில் உள்ள பொருத்துக பகுதியைக் கவனத்தில் கொள்க.
குறுவினாக்கள்: சுருக்கமாக நேரடியாக விடையளித்தால் போதும்.
முக்கியமானவை: செய்யுள் 1,3,5,6,7,9 இயல்கள்; உரைநடை 1,5,6,7,8,9,10 இயல்கள்.
சிறுவினாக்கள்: தலைப்பிட்டு எழுதவும். முக்கியமானவை: செய்யுள் 2,3,4,8,10 இயல்கள் -உரைநடை 2,3,4,6,8 இயல்கள்.
நெடு வினா: தலைப்பு, முன்னுரை, உட்தலைப்புகள் முடிவுரையோடு எழுத வேண்டும்.
செய்யுள்: திருக்குறளிலிருந்து ஒரு வினாத் தொடர் நிலைச் செய்யுளிலிருந்து ஒரு வினா வரும். விடை கட்டுரை வடிவில் இருக்க வேண்டும். இடையிடையே பாடலடிகளை மேற்கோள் காட்டுவது முக்கியம் .
உரைநடை:முதல் ஐந்து இயல்களிலிருந்து ஒரு வினா கண்டிப்பாக இடம் பெறும்.
பயன்படுத்துதல் திறன்: 4,6,9,10 ஆகிய இயல்களில் செய்யுள் பகுதியிலிருந்து ஏதேனும் ஒரு பாடல் கொடுத்து ஐந்து வினாக்கள் வினவப்படும்.
மனப்பாடப் பகுதி: மனப்பாடப் பகுதி எழுதும் போது நூற்பெயரும் ஆசிரியர் பெயரும் எழுதுவது சிறப்பு.
இலக்கணப் பகுதியிலிருந்து 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 10 வரும். ('உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக'5 வினாக்கள். 'கோடிட்ட இடங்களை நிரப்புக' - 5 வினாக்கள்)
இரு மதிப்பெண் வினாக்கள்- 5.
இவற்றினை சான்று காட்டி எழுத வேண்டும்.
ஐந்து மதிப்பெண் வினாக்கள்: 1) வெண்பாவின் பொது இலக்கணம் அல்லது ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் 2) அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக 3) அணி இலக்கணம். இவற்றில் ஏதேனும் 2 வரும்.
சொற்பொருள் பின்வரு நிலையணி, தற்குறிப்பேற்ற அணி, வஞ்சப் புகழ்ச்சி அணி, உவமை அணி மிகவும் முக்கியம். இவற்றை அணி இலக்கணம், எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் படிநிலைகளில் எழுத வேண்டும்.
தமிழாக்கம்: ஆங்கிலப் பத்தி (3 மதிப்பெண்), பழமொழி (2 மதிப்பெண்). பாட நூலுள் உள்ளனவற்றைப் படித்தால் போதுமானது.
கதையை நிறைவு செய்தல் பகுதியைக் கற்பனை நயத்துடன் எழுதவும். அல்லது கவிதை எழுதுதல் பகுதிக்கு மழை, முயற்சி, கடல், குழந்தை, நட்பு என்னும் தலைப்புகளில் 8 வரிகளில் தயார் செய்து கொள்வும்.
பாடல் நயம் பாராட்டல்: முன்னுரை, ஆசிரியர் குறிப்பு, திரண்ட கருத்து, தொடை நயங்கள் (மோனை, எதுகை, இயைபு) அணி நயம், முடிவுரை ஆகிய தலைப்புகளில் எழுதவும்.
படிவம் நிரப்புதல் பகுதியில் உங்கள் பெயரை எழுதக் கூடாது. வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள பெயரையே எழுத வேண்டும்.
நண்பனுக்குக் கடிதம்: இடம், நாள், விளித்தொடர், கடிதச் செய்தி, கையொப்பம், உறைமேல் முகவரி என்னும் அமைப்பிலும் விண்ணப்பம்: விடுநர், பெறுநர், விளித்தொடர், பொருள், விண்ணப்பச் செய்தி, வலப்பக்கம் கையொப்பம், இடப்பக்கம், இடம், நாள் உறைமேல் முகவரி என்னும் அமைப்பிலும் இருத்தல் வேண்டும்.
பொதுக்கட்டுரையில் இடையிடையே பொருத்தமான பழமொழிகள், மரபுத் தொடர்கள், பொன்மொழிகள், செய்யுள் மேற்கோள்கள் இடம் பெறுதல் அவசியம்.
புலவர் சு. மதியழகன்,
தேசிய நல்லாசிரியர்
