
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இது, ஒரு நாள் அரங்கில் இந்திய அணி பங்கேற்ற 900ஆவது போட்டி. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, அறிமுக வீரர் பாண்ட்யா வேகத்தில் பணிந்தது. இவர், 3 விக்கெட் வீழ்த்த, 43.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின் எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கோஹ்லி அரை சதம் (85*) கடந்து கைகொடுத்தார். 33.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

