sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

மக்களால் மக்களுக்காக...

/

மக்களால் மக்களுக்காக...

மக்களால் மக்களுக்காக...

மக்களால் மக்களுக்காக...


PUBLISHED ON : செப் 12, 2016

Google News

PUBLISHED ON : செப் 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைத்துலக மக்களாட்சி நாள் (International Day of Democracy) செப்டம்பர் 15

மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பார்கள். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்கிற கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு 'மக்கள்' என்றும் கிராட்டோஸ் என்பதற்கு 'அதிகாரம்' அல்லது 'ஆட்சி' என்றும் பொருள்.

தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி முறையே நடைமுறையில் உள்ளது. ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துகளைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தனிக் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சி செய்வார்கள்.

மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்கலாம். பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இந்த மக்களாட்சி நடைபெற்றது.

மறைமுக மக்களாட்சி முறையில், மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கம் நடத்துகிறார்கள்.

“மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்' என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோவும் “மக்களால் மக்களுக்காக மக்களால் செய்யப்படும் ஆட்சியே மக்களாட்சி” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனும் கூறியிருக்கிறார்கள்.

இதுபோல மக்களாட்சிக்கான விளக்கம் அழகாக இருந்தாலும், ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பிரதிநிதிகளின் செயல் மாறிவிடுவது ஜனநாயக நாடுகளில் பொதுவாகக் காணக்கூடிய நடைமுறையாக இருக்கிறது.

* மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிக்க ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது.

* பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது.






      Dinamalar
      Follow us