sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தமிழ் எழுத்துக்களில் வந்த மாற்றம்

/

தமிழ் எழுத்துக்களில் வந்த மாற்றம்

தமிழ் எழுத்துக்களில் வந்த மாற்றம்

தமிழ் எழுத்துக்களில் வந்த மாற்றம்


PUBLISHED ON : மே 27, 2019

Google News

PUBLISHED ON : மே 27, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களில் முக்கியமான மாற்றங்களை, சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர்கள் இருவர். ஒருவர் வீரமாமுனிவர், மற்றொருவர் ஈ.வெ.ராமசாமி.

அதுவரை 'ஒ' குறிலைக் குறிக்க அதன் மீது ஒரு புள்ளி வைக்கும் வழக்கம் இருந்தது. புள்ளி வைக்காமல் எழுதப்பட்ட 'ஒ' நெடிலாகக் கருதப்பட்டது.

இதேபோல் 'எ' குறிலை எழுத குறில் 'எ' மீது புள்ளி வைக்கும் வழக்கம் இருந்தது. இம்மாதிரி குறில் உயிரெழுத்துக்களை மாற்றி எழுதும் வழக்கம் வீரமாமுனிவரால் கொண்டுவரப்பட்டது.

இப்படியே 'ஒ', 'ஓ', 'கொ', 'கோ' என தற்போதைய வடிவங்களை அவர்தான் கொண்டு வந்தார். அதற்கு முன் பயன்படுத்திய வவடிவம் படத்தில் காண்க.

ஈவெ.ரா., தமிழ் எழுத்துக்களில் சில மாற்றம் வேண்டும் என்று கூறியதை அடுத்து, 1979ல் தமிழக அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்தது.

அதற்கு முன், எழுத்துக்களை அச்சுக் கோப்பதில் சிரமங்கள் இருந்தன. சில குறிப்பிட்ட எழுத்துக்களுக்காக புதிய அச்சுகள் உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் ஈவெரா மாற்றங்கள் வேண்டும் என்றார். அவர் பரிந்துரை செய்த எழுத்துச் சீர்திருத்தங்களில், சிலவற்றை மட்டும் தமிழக அரசு ஏற்று, நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதைத்தான் நாம் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.






      Dinamalar
      Follow us