PUBLISHED ON : செப் 18, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழமையான வீடு ஒன்றில், கை பம்ப் இருக்கிறது.
அந்த பம்புக்கு அடியில் எப்போதும், 25 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும்.
பம்ப் கைப்பிடியை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்தினால், தண்ணீர், 3 அடி மேலே எழும்.
மீண்டும், பம்ப் கைப்பிடியை மேல்நோக்கி இழுக்கும்போது, தண்ணீர், 2 அடி அளவு கீழ்நோக்கிப் போய்விடுகிறது.
எனில், பம்ப்பை, எத்தனை முறை கீழ்நோக்கி அழுத்தினால், தண்ணீர் கிடைக்கும்?
விடை: 25 முறை
எப்படியென்றால், பம்ப்பை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்தும்போது, 3 அடி அளவு தண்ணீர் மேலே எழும்புகிறது. அதை, மேல்நோக்கி இழுக்கும்போது, தண்ணீர், 2 அடி அளவு கீழ்நோக்கிச் சென்றுவிடுகிறது. இதன்மூலம், பம்ப்பை, ஒருமுறை கீழ்நோக்கி அழுத்த, 1 அடி அளவுக்குத் தண்ணீர் மேலே எழும்புகிறது.
அப்படி, 25 முறை கீழ்நோக்கி அழுத்த, 25 அடி ஆழத்தில் உள்ள தண்ணீர் மேலே வரும்.

