PUBLISHED ON : ஜூன் 12, 2023
கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்:
1. நம் நாட்டின் கடற்படையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆறு நீர்-மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு _________________ நாட்டுடன் இந்தியா பேச்சு-வார்த்தை நடத்தி வருகிறது.
2. சீனாவின் 37 போர் விமானங்கள் ___________________ நாட்டின் வான்பாதுகாப்பு எல்லைக்குள்
அத்துமீறி நுழைந்தன.
3. ______________ நாடு நமது லடாக் எல்லைப் பகுதியில் புதிய கட்டுமானங்களை அதிகரிப்பதாக,
சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை செய்துள்ளன.
4. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வரையப்பட்டிருந்த அகண்ட பாரத சுவரோவியத்திற்கு ___________, ___________, _____________ ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
5. ஒடிஷாவின் பாலசோர் அப்துல் கலாம் தீவில் இந்தியாவின் சக்தி வாய்ந்த ____________________ ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. இரவில் முதன்முறையாக வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
விடைகள்:
1. ஜெர்மனி
2. தைவான்
3. சீனா
4. வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான்
5. அக்னி பிரைம்.
