sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 02, 2026 ,பங்குனி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

கியா கியா குருவி நான்....

/

கியா கியா குருவி நான்....

கியா கியா குருவி நான்....

கியா கியா குருவி நான்....


PUBLISHED ON : மே 22, 2017

Google News

PUBLISHED ON : மே 22, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாவனையை அடிப்படையாகக் கொண்ட இவ்விளையாட்டு, குழுவாக ஆடப்படுகிறது. குறைந்தது 5 பேர் தேவை. இதில் ஒருவர் குருவியாகவும், மற்றவர்கள் தென்னை மரம், வாழை மரம், வேப்ப மரம் மற்றும் ஆல மரம் போன்று நடிக்க வேண்டும். முதலில் சந்தோஷமாக வாழ்ந்த குருவி ஒன்றுக்கு, துன்ப நேரமாக அதன் இறக்கை ஒடிந்துவிடுகிறது. இப்போது, இறக்கை ஒடிந்த குருவி, ஒவ்வொரு மரமாகச் சென்று தஞ்சம் கேட்க வேண்டும். முதலில் வேப்ப மரத்திடம் சென்று,

கியா கியா குருவி நான்

கியா கியா குருவி நான்

முள்ளில் ஒரு குருவி வசித்து வந்தது

அதன் இறக்கை ஒடிந்து விட்டது

வேப்ப மரமே! வேப்ப மரமே...

சிறகிழந்த பறவைக்கு இடம் தருவாயா?

என்று பாட வேண்டும். அப்போது, வேப்ப மரம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, மறுத்துவிட வேண்டும். பிறகு தென்னை மரத்திடம் போய், அதே பாட்டை பாட வேண்டும். 'தென்னை மரமே, தென்னை மரமே, சிறகிழந்த பறவைக்கு இடம் தருவாயா?' என்று கேட்கும்போது, தென்னை மரமும் சாக்குப்போக்கு சொல்லி, மறுத்துவிட வேண்டும். அடுத்து வாழை மரத்திடம் கேட்க வேண்டும். அதுவும் மறுத்துவிட்ட பின்னர், கடைசியாக ஆலமரத்திடம் செல்ல வேண்டும். ஆல மரமோ, குருவியிடம் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி, அடைக்கலம் தர ஒப்புக்கொள்ள வேண்டும்.

இப்போது, திடீரென சூறாவளி தோன்றுகிறது. அப்போது ஒவ்வொரு மரமாக குருவி பறந்து போக வேண்டும். முதலில் வேப்ப மரத்திடம் போய்,

காற்று மழை வீசுது,

காற்று மழை வீசுது

வேப்ப மரம் வீழ்ந்தது

வேப்ப மரம் வீழ்ந்தது என்று பாட வேண்டும். வேப்ப மரமும் வீழ்வது போல் கீழே சாய வேண்டும். அடுத்து, காற்று மழை வீசுது, தென்னை மரம் வீழ்ந்தது, தென்னை மரம் வீழ்ந்தது என்று பாட, தென்னையும் வீழும். அடுத்து, வாழை மரமும் வீழ வேண்டும். இறுதியாக, ஆலமரத்திடம் சென்று,

காற்று மழை வீசுது,

காற்று மழை வீசுது, ஆனாலும்

ஆலமரம் அசைந்து அசைந்து ஆடுது

என்று சந்தோஷமாகப் பாட வேண்டும்.

இது, உதவி செய்யும் குணமுள்ள மரம், சூறாவளியிலிருந்து காக்கப்பட்டதாகவும், சுயநலமாக இருந்த மற்ற மரங்கள் வீழ்ந்ததாகவும் பொருள்பட விளையாட்டு அமைந்துள்ளது.






      Dinamalar
      Follow us