
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். பைனலில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐதராபாத் அணிக்கு வார்னர் அரை சதம் விளாச, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய பெங்களூரு அணியின் கெய்ல், கேப்டன் கோஹ்லி அதிரடி காட்டினர். பின் வந்தவர்கள் ஏமாற்ற, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் மட்டும் எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம், பெங்களூரு அணிக்கு மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

