செய்தி அறிவோம்: உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு
செய்தி அறிவோம்: உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு
PUBLISHED ON : அக் 21, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ஜான் ஃபெர்னாண்டஸ், (௨8). தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர். கடந்தவாரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார். தீவிர சிகிச்சை பெற்ற அவருக்கு, கடந்த 17ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது குடும்பத்தார் முன்வந்தனர். அவரது கல்லீரல், 2 கிட்னி, இதயம், 2 கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டன. இந்த உறுப்புகள், 6 பேருக்கு பொருத்தப்பட்டன. இதனால் அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
tamil.thehindu.com

