sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

ரீலா ரியலா?

/

ரீலா ரியலா?

ரீலா ரியலா?

ரீலா ரியலா?


PUBLISHED ON : செப் 23, 2024

Google News

PUBLISHED ON : செப் 23, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிச் செடிகள் புதர் வகையைச் சேர்ந்தவை.

உண்மை. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இவை பரவலாக வளர்கின்றன. இவற்றில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களால் இந்த மலைப் பிரதேசமே நீல நிறத்தில் தோன்றுகிறது, எனவே இந்த மலைத் தொடருக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலான்தீஸ் குந்தியானா (Strobilanthes kunthiana) என்பது அவற்றின் தாவரவியல் பெயர். இவை மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீ. உயரத்தில் வளரும் இந்தச் செடிகள், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கின்றன.

வரிக்குதிரை தனித்து வாழும் விலங்காகும்.

தவறு. வரிக்குதிரை ஒரு சமூகவிலங்காகும். இவை எப்போதும் மந்தைகளாக வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு தாவர உண்ணி. இந்த விலங்கு நின்றபடி தூங்கும் தன்மை கொண்டது. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தைச் சாய்த்தபடி நின்றுகொண்டே தூங்கும். இதன் உயரம்

2 மீட்டர், நீளம் 3 மீட்டர், எடை 250 முதல் 500 கிலோ வரை இருக்கும். இவற்றின் உடலில் இருக்கும் வரிகள் மனிதர்களின் கைரேகை போல ஒவ்வொரு விலங்கிற்கும் தனித்துவமாக இருக்கும்.






      Dinamalar
      Follow us