உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 18, 2018

அ நிறம் | அளவு
தமிழ் முதுகலை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, இனிவரும் காலங்களில் தமிழ் முதுகலை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதன் தொடக்கமாக, இந்தக் கல்வியாண்டு முதலே (2018- - 19) கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிப்பதாக பல்கலைக்கழகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
