PUBLISHED ON : ஜூலை 08, 2019
நாம் ருசித்துச் சாப்பிடும் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவை எப்படி உற்பத்தியாயின, எப்படி நாடு முழுக்கப் பரவின என்று அறிவீர்களா? பல்வேறு பருப்பு வகைகளும் நாட்டின் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டன; பின்னர் வணிகர்கள் மூலமாக பிற மாநிலங்களுக்கும், அயல் நாடுகளுக்கும் சென்றன.
தொல்லியலாளர்கள், ஒவ்வொரு நாகரிகத்தின் வளர்ச்சியை ஆராயும்போதும், அவர்களுடைய உணவுமுறை பற்றியும் ஆய்வு செய்தனர். பருப்பு வகைகளின் உற்பத்தி, எப்படிப் பரவி இருக்கும் என்பதைப் பல நாடுகளுக்குச் சென்று ஆராய்ந்து, தரவுகளை வெளியிட்டனர்.
துவரை தோன்றிய இடம்: இந்தியா (ஒடிசா, வடக்கு ஆந்திரம், சத்தீஸ்கர்)
உளுந்து தோன்றிய இடம்: தென்னிந்தியா
பாசிப் பருப்பு தோன்றிய இடம்: தென்னிந்தியா
கொண்டைக் கடலை தோன்றிய இடம்:தென்மேற்கு ஆசியா, லெவண்ட்
கொள்ளு தோன்றிய இடம்: இந்தியா
பட்டாணி தோன்றிய இடம்: தென்மேற்கு ஆசியா
மசூர் பருப்பு தோன்றிய இடம்: தென்மேற்கு ஆசியா, லெவண்ட்
மொச்சை தோன்றிய இடம்: கிழக்கு ஆப்பிரிக்கா
காராமணிதோன்றிய இடம்: மேற்கு ஆப்பிரிக்கா, கானா
தகவல்: The Archaeobotany of Indian pulses: Identification, processing and evidence for cultivation.
