
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு முதன்முறையாக, எந்த ரக போர் விமானத்தில் சமீபத்தில் பயணித்ததன் மூலம், 'போர் விமானத்தில் பயணித்த இரண்டாவது பெண் ஜனாதிபதி' என்ற பெருமையைப் பெற்றுள்ளார்?
அ. மிகோயன் - 29
ஆ. சுகோய் - 30
இ. ப்ஹல்கன் - 76
ஈ. ல்யூஷின் - 78
2. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த இராஜாஜியின் கொள்ளுப் பேரன் கேசவன், சமீபத்தில் எந்தக் கட்சியில் இருந்து வெளியேறி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்?
அ. அ.தி.மு.க.
ஆ. தி.மு.க.
இ. கம்யூனிஸ்ட்
ஈ. காங்கிரஸ்
3. இந்தியாவில், தேசியக் கட்சிகள் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுgள்ள அறிவிப்பில், புதிதாகத் தேசிய அந்தஸ்து கிடைத்துள்ள கட்சி எது?
அ. ஆம் ஆத்மி
ஆ. திரிணாமுல் காங்கிரஸ்
இ. மக்கள் நீதி மய்யம்
ஈ. விடுதலைச் சிறுத்தைகள்
4. மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், தொழில்நுட்ப ஜவுளி துறையின் கீழ் முதன்முறையாக, எத்தனை தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களுக்குத் தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை வெளியிட்டுள்ளது?
அ. 25
ஆ. 31இ. 16ஈ. 20
5. தமிழகத்தின் எந்த வழித்தடத்தில், 'வந்தே பாரத்' இரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார்?
அ. ஈரோடு - சேலம்
ஆ. கோவை - நெல்லை
இ. நெல்லை - சென்னை
ஈ. சென்னை - கோவை
விடை: 1. ஆ, 2. ஈ, 3. அ, 4. ஆ, 5. ஈ.

