PUBLISHED ON : செப் 26, 2016

தமிழகத்தின் கடற்பகுதிகளில் கடற்பாசிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றில் இருந்து பெறப்படும் 'கராகீனன்' என்ற மாவுப்பொருள், உணவு, ரசாயனம், மருந்து மற்றும் அழகு சாதனத் தயாரிப்பு பொருட்களிலும், ஐஸ்கிரீம், பற்பசை போன்ற பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் கடற்பாசியில் இருப்பதால், இது விவசாயிகளால் இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இதன் உற்பத்தி இந்தியாவில் குறைவாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து, ஆண்டுக்கு 1,500 டன் கராகீனன் இறக்குமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடற்பாசி உற்பத்தியை அதிகரிக்க, 13 கடலோர மாவட்டங்களில் கடல்பாசி பயிரிடும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து நிதியுதவி வழங்கினார். இந்தத் திட்டம், மீனவ மகளிர் குழுக்கள் மூலம் ஒப்பந்த முறையில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
