
ஏப்ரல் 12, 2011 - உலக விண்வெளி நாள்
யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961இல் முதல் மனிதனாக விண்வெளி சென்றார். இந்தப் பயணம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் 13, 1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை
ரௌலட் சட்டத்தை எதிர்த்து, ஜாலியன்வாலா பாக் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதைக் கலைக்க ஜெனரல் டயர் தலைமையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 13, 1930 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்
தமிழறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். சமூக சீர்திருத்தக் கருத்துகளை எளிமையான தமிழில் பாடல்களாக எழுதினார். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 14, 1891 - அம்பேத்கர் பிறந்த நாள்
நாட்டின் முதல் சட்ட அமைச்சர். இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவருக்கு 1990இல் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 15, 1452 - லியனார்டோ டா வின்சி பிறந்த நாள்
இத்தாலிய கட்டடக் கலைஞர். சிற்பி, ஓவியர் என பல்துறை மேதையாகவும் இருந்தார். கடைசி விருந்து, மோனா லிசா போன்ற இவருடைய ஓவியங்கள் அழியாப் புகழ் பெற்றவை.
ஏப்ரல் 15, 1469 - குருநானக் தேவ் பிறந்த நாள்
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தார். சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மிக தளத்தை உருவாக்கினார்.