sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

யோகாசனம்: கொஞ்சம் கவனம்!

/

யோகாசனம்: கொஞ்சம் கவனம்!

யோகாசனம்: கொஞ்சம் கவனம்!

யோகாசனம்: கொஞ்சம் கவனம்!


PUBLISHED ON : ஜூன் 05, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யோகாசனத்தை கற்க விரும்புபவர்கள் நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

* காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்தது.

* மாலையிலும் செய்யலாம். ஆனால், உணவு உண்டு, மூன்று மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும்.

* யோகாசனம் செய்வதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சிகள் வேண்டாம்.

* யோகாசனத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், யோகாசனத்துக்கு பின்பு அரை மணி நேரம் கழித்தும் திரவ பானங்களைப் பருகலாம்.

* ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.

* உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை குருவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்யவும்.

* ஆசனங்கள் செய்யும்போது, ஓர் ஆசனத்துக்கு அடுத்து அதற்கான மாற்று ஆசனம் செய்தே அடுத்த ஆசனத்தைச் செய்தல் வேண்டும்.

* ஆசனங்களுக்கிடையில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு ஆசனத்தின் முடிவிலும், இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.

* ஆசனங்களை மிக இலகுவாகச் செய்ய வேண்டும். உடல் வளைந்து கொடுக்கவில்லை எனில், வலுக்கட்டாயமாகச் செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயன்ற ஆசனங்களையே செய்தல் வேண்டும்.

* ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும்.

* இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து, 20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.

* எல்லா ஆசனங்களையும் ஒரே நாளில் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு நாளும், ஒருசில குறிப்பிட்ட ஆசனங்களைச் செய்யலாம்.

* யோகாசனம் என்பது உடற்பயிற்சி அல்ல. அது மனமும் உடலும் இணையும் அற்புதப் புள்ளி. ஒரு யோகாசனத்தைச் செய்து முடித்தபின்னர், அதன் பல்வேறு படிநிலைகளை மனத்தில் மீண்டும் ஓட்டிப் பார்த்து, தியானம் செய்யவேண்டும். இதன்மூலம், மனமும் உடலும் ஒருமுகப்படும்.

* உடலின் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்துகொள்ளும் போதுதான், நம்முடைய உடல் எப்படிப்பட்ட பொக்கிஷம் என்பது உங்களுக்கு விளங்கும்.






      Dinamalar
      Follow us