PUBLISHED ON : ஜன 15, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன. கூடவே, அபாயங்களையும் அவை அழைத்துக் கொண்டு வருகின்றன.
அண்மையில், 'மைக்ரோசாப்ட்' அதன், 'வால் இ' எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
இதன் சிறப்பம்சம், ஒரு குரலை கேட்ட மூன்றே வினாடிகளில் அதே குரலில் பேசிவிடும் என்பது தான். அதுமட்டுமின்றி; பேசியவர்களின் அதே உணர்வையும் அது பிரதிபலித்துவிடும். அவ்வளவு ஏன், ஒருவர் பேசாததை கூட அவரின் குரலிலேயே பதிவு செய்துவிடும் வல்லமை இதற்கு உள்ளது.
இந்த இடத்தில் தான் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பு, மோசடிகளுக்கு துணைபோய்விடும் என்று எச்சரிக்கின்றனர். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில், என்ன தடுப்பு வசதிகளை வழங்கப் போகிறதோ மைக்ரோசாப்ட் நிறுவனம், தெரியவில்லை.

