/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
கானா தமிழ்ச்சங்க பொங்கல் திருவிழா
/
கானா தமிழ்ச்சங்க பொங்கல் திருவிழா

கானா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தலைவர் மோகன், உபதலைவர் சத்தீஸ், செயலாளர் ஆனந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் முன்னேற்பாட்டில் பொங்கல் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது, இதில் கிட்ட தட்ட 700 நபர்களுக்கு மேல் தமிழர்கள் மற்றும் பிற இந்திய மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள், இதில் காலை 9 மணி அளவில் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன், நமது கலாச்சாரத்துடன் கூடிய கலை நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், இதில் கானா நாட்டின் ஜல்லிக்கட்டு காளையும் வரவழைக்கப்பட்டது, அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்,
இதில் சிறப்பு விருந்தினராக கானா நாட்டின் இந்திய தூதர் Manish Gupta (Indian high commissioner, Ghana) கலந்து கொண்டு சிறப்பித்தார், அத்துடன் பிற சங்கங்களின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும், கானாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் பிற மொழி மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், மற்றும் அன்று மதியம் அறுசுவை விருந்து வாழை இலையில் பரிமாறப்பட்டது, பொங்கல் திருவிழா மிக இனிமையாகவும், விமர்சையாகவும் நடந்து முடிந்தது.
- தினமலர் வாசகர் ஞானபண்டிதன்
Advertisement