/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு
/
தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு
தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு
தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு
பிப் 04, 2026

தொல்காப்பியம் நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெளியீடு
இந்தியக் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) வெளியிட்ட 'தொல்காப்பியம்' நூலின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு 26.01.2026 அன்று ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் வெளியிடப்பட்டது.
பிராங்பர்ட் இந்தியத் தூதரகத்தின் துணை தூதர் (Consul General, CGI, Frankfurt) சுசிதா கிஷோர் நூலை வெளியிட்டார்.
ஹெஸென் மாநில உள்துறை அமைச்சகத்தின் மாநிலச் செயலாளர் மார்ட்டின் ரோஸ்லர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிராங்பர்ட் தமிழ்ச் சங்கத்தின் (FTS) தலைவர் பாலாஜி பாலு ஹரிதாஸ் முன்னிலை வகித்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடுகளை ஜெர்மனியில் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளைப் பிராங்பர்ட் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து வருகிறது. Indian Education Ministry இந்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் CICT ஆகியவற்றுடன் இணைந்து இந்த நூல் வெளியீட்டுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை பிராங்பர்ட் தமிழ்ச் சங்கம் FTS செய்திருந்தது.
வெளிநாட்டு மண்ணில் செம்மொழித் தமிழுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் ஒரு முக்கிய மைல் கல். ஜெர்மனி முழுவதும் தமிழ் பாரம்பரியம், மொழி மற்றும் சங்க இலக்கியங்களை மேம்படுத்துவதில் பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கிடைத்த பெருமையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது
Advertisement

