/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தார் பல்கலைக்கழகத்தில் இந்திய தூதர்
/
கத்தார் பல்கலைக்கழகத்தில் இந்திய தூதர்
ஏப் 09, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள ஜார்ஜ் டவுண் பல்கலைக்கழகத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் விபுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர்களை சந்தித்து பேசினார்.
அவர்கள் சர்வதேச உறவில் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கை உள்ளிட்டவை குறித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்திய மாணவர்கள் உயர் கல்வியில் சிறப்பாக தேறி பெருமை சேர்க்க வாழ்த்தினார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement