/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
திருவனந்தபுரம் ஸ்வதேசி சங்கமம் (TSS) ஜெட்டாவில் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
/
திருவனந்தபுரம் ஸ்வதேசி சங்கமம் (TSS) ஜெட்டாவில் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
திருவனந்தபுரம் ஸ்வதேசி சங்கமம் (TSS) ஜெட்டாவில் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
திருவனந்தபுரம் ஸ்வதேசி சங்கமம் (TSS) ஜெட்டாவில் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
பிப் 26, 2026

திருவனந்தபுரம் ஸ்வதேசி சங்கமம் (TSS) ஜெட்டாவில் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
ஜெத்தா: ஜெத்தாவில் வசித்து வரும் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைப்பான திருவனந்தபுரம் ஸ்வதேசி சங்கமம் (TSS) சிறப்புமிக்க இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை கோல்டன் பெர்ல் ஹோட்டலில் நடைபெற்றது. ஜெத்தாவில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருவனந்தபுரம் பூர்வீகத்தவர்கள் மட்டுமன்றி, சமூக, கலாச்சார மற்றும் ஊடகத் துறையின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
சவுதி அரேபியாவின் நிறுவல் தின கொண்டாட்டங்களின் பின்னணியில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பு முக்கியத்துவம் பெற்றது. புனித ரமலான் மாதம் வெளிப்படுத்தும் ஆன்மிகப் பரிசுத்தத்தையும் சகோதரத்துவ உணர்வையும் நினைவுகூர்வதை கடந்தும், இஃப்தார் சந்திப்பு வெளிநாட்டில் வாழும் சமூக உறவுகளை புதுப்பிக்கும் மேடையாகவும், தாயகத்தில் அனுபவித்த நோன்பு கால இனிய நினைவுகளை மீண்டும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. ஒற்றுமை, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்திகளை எடுத்துரைத்த நிகழ்ச்சி இப்தார் விருந்துடன் நிறைவுற்றது.
நிகழ்ச்சியின் நடவடிக்கைகள் TSS தலைவர் தருண் ரத்னாகரன், பொதுச்செயலாளர் ஜாபர் ஷெரீப், பொருளாளர் ஷாஹின் ஷாஜகான் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது.
- ஜெட்டாவில் இருந்து நமது செய்தியாளர் எம்.சிராஜ்
Advertisement

