/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
விமானத்தில் திடீரென மயங்கிய பயணிக்கு செவிலியர் முதல் உதவி
/
விமானத்தில் திடீரென மயங்கிய பயணிக்கு செவிலியர் முதல் உதவி
விமானத்தில் திடீரென மயங்கிய பயணிக்கு செவிலியர் முதல் உதவி
விமானத்தில் திடீரென மயங்கிய பயணிக்கு செவிலியர் முதல் உதவி
மே 01, 2024

சவூதியில் இருந்து Gulf Air விமானத்தில் சென்னை சென்றவருக்கு விமானத்தில் திடீரென மயக்கம் ஏற்பட்டு உடல் வியர்த்து நிலை குலைந்தார்.
பயணியின் உடல்நிலை கண்டு விமான ஊழியர்கள் கொஞ்சம் பதட்டமடைந்தனர். உடனே விமான பணிப்பெண்கள் (Any Doctor or Nurses on the board please proceed to Cabin Crew ) யாரவது மருத்துவர் அல்லது செவிலியர்கள் விமானத்தில் இருந்தால் உதவ வாருங்கள் என அழைத்தனர்.
அந்த விமானத்தில் பக்ரைன் நாட்டிலிருந்து சென்னை சென்ற செவிலியர் முத்தமிழ் இலக்கியா பஷீர் உடனே சென்று முதலுதவி செய்து அவரை சீரான நிலைக்கு கொண்டுவந்தார் . சர்க்கரை அளவு குறைந்து கடுமையான காய்ச்சலும் இருந்தது , செவிலியர் இலக்கியாவின் முதலுதவியை தொடர்ந்து பயணி குணமடைந்தார். இவரின் மனிதநேயச் சேவையை பாராட்டி அந்பத விமானத்தில் பயணித்த பயணிகள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் முஹமது ரஹ்மத்துல்லா
Advertisement