sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

நூல் வெளியீட்டு விழா

/

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா


மே 01, 2024

Google News

மே 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : துபாய் பிரமுகர் பங்கேற்ற தியாகச்சுடர் திப்பு சுல்தான் நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்புடன் நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாணியர் மினி ஹாலில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் தியாகச்சுடர் திப்பு சுல்தான் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு முகவை முத்தமிழ் மன்ற தலைவர் குத்புதீன் ஐபக் எனும் மானுடப் பிரியன் தலைமை வகித்தார்.

முன்னதாக மௌலவி ஏ. முஹம்மது சபீக் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். இஸ்லாமிய இலக்கியக் கழக அமைப்பாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் குத்புதீன் ஐபக் நூலை வெளியிட முதல் பிரதியை திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹெச். ஹசன் அஹமது பெற்றுக் கொண்டார்.


சென்னை உலக தமிழாராய்ச்சி சிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முனைவர் ஜாஸ்மின், சேக்கிழார் விருது பெற்ற எழுத்தாளர் டாக்டர் நீ.சு. பெருமாள், பட்டிமன்ற பேச்சாளர் ச. துரைப்பாண்டியன், இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அப்பாஸ் அலி, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் செய்யது ஹுசைன், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.


நூலாசிரியர் ஈரோடு கு. ஜமால் முஹம்மது ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தனது பாட்டனார் வாழ்ந்த மண்ணில் இந்த நூல் வெளியிடப்படுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். கவிஞர் இதயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கே.ஏ. சாதிக் நஸ்ரத் கான் நன்றியுரை நிகழ்த்தினார்.

விழாவில் எமனேஸ்வரம் கமால் முஸ்தபா, அப்துல் நசீர், கீழக்கரை சமூக ஆர்வலர் அபுல் ஹசன், தமிழ்மாமணி இளையான்குடி கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, கவிஞர் ஜெயராமன், ஆமினா முஹம்மத், இளையான்குடி அப்துல் கபூர் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.


- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us