/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
புதுடில்லி உலக புத்தக கண்காட்சியில் கத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
/
புதுடில்லி உலக புத்தக கண்காட்சியில் கத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
புதுடில்லி உலக புத்தக கண்காட்சியில் கத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
புதுடில்லி உலக புத்தக கண்காட்சியில் கத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
ஜன 12, 2026

தோஹா: இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் உலக புத்தக கண்காட்சியில் கத்தார் மற்றும் ஸ்பெயின் நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளன.
இந்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் கத்தார் நாட்டின் கலாச்சாரத்துறை மந்திரி ஷேக் அப்துல் ரஹ்மான் பின் ஹமத் அல் தானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் இந்திய ராணுவம் குறித்த சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 53 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்த கண்காட்சியில் 60 நாடுகளுக்கும் மேற்பட்ட மூவாயிரத்தை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் கத்தார் நாட்டின் கலை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கத்தார் நாட்டின் இலக்கிய ஆளுமைகள் பங்கேறும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. வரும் 18 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.
- தோஹாவில் இருந்து நமது வாசகர் இஸ்மாயில்
Advertisement

