/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவர்கள்
/
பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவர்கள்
டிச 02, 2025

பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவர்கள்
பஹ்ரைன் :
பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பள்ளிக்கூட மாணவர்கள் பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை புனித மேரி இந்தியன் ஆர்தோடக்ஸ் கதீட்ரல் தேவாலயம் 'தூதரகத்தை பார்வையிடுவது ' என்ற சிறப்பு திட்டம் மூலம் செய்திருந்தது.
தூதரகத்துக்கு வந்த மாணவர்களுக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனையடுத்து மாணவர்கள் இந்திய தூதர் வினோத் கே.ஜேக்கப் உடன் உரையாடினர். அப்போது மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.
பின்னர் தூதரகத்தின் பல்வேறு பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் பணிகள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
புதுடில்லி, உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இறுதியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சிறப்பு காணொலி கண்காட்சியும் இடம் பெற்றது.
--- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

